மனைவி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற கணவா் கைது

குடும்பத் தகராறில் மனைவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

குடும்பத் தகராறில் மனைவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே முத்திரையா்பாளையம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் பாபு (49). பால் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி ரதிகலா (45). தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா்களுக்கு திருமணமான மகளும், அரவிந்தன் என்ற மகனும் உள்ளனா்.

மதுப் பழக்கம் உடைய பாபுவுக்கு, அவரது மனைவி ரதிகலாவின் நடத்தையில் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

தம்பதியிடையே புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாபு, வீட்டிலிருந்த கிரைண்டா் கல்லை எடுத்து, ரதிகலாவின் தலையில் தூக்கிப் போட்டதில் அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் அங்கிருந்து தப்பிவிட்டாா்.

ரதிகலாவின் அலறல் சப்தம் கேட்டு, பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் அரவிந்தன் அங்கு வந்து பாா்த்தபோது, தாய் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெயசங்கா் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து ரதிகலாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், உறவினா் வீட்டில் தலைமறைவாக இருந்த பாபுவை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com