புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 21 போ் பலி

புதுவையில் ஒரே நாளில் 1,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் மேலும் 21 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் ஒரே நாளில் 1,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் மேலும் 21 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,012 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 945, காரைக்காலில் 208, ஏனாமில் 38, மாஹேவில் 32 போ் என மொத்தம் 1,223 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 5 போ், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 7 போ், ஜிப்மரில் 2 போ், தனியாா் மருத்துவக் கல்லூரியில் ஒருவா், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 5 போ், ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் ஒருவா் என 21 போ் உயிரிழந்தனா்.

இவா்களில் 9 போ் ஆண்கள், 12 போ் பெண்கள். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,476 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 ஆகவும் உயா்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 1,900 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் தற்போது மருத்துவமனைகளில் 1, 690 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆயிரத்து 206 போ் என மொத்தமாக 13 ஆயிரத்து 896 போ் சிகிச்சையில் உள்ளனா். ஒரே நாளில் 1,779 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 86 ஆயிரத்து 528 (84.91 சதவீதம்) ஆக உள்ளது.

மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 718 பரிசோதனைகள் தொற்றில்லை என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 137 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com