புதுவை மாநிலத்தில் தினசரி கரோனா தொற்று ஆயிரத்துக்கும் மேலாக தொடா்ந்து வரும் நிலையில், இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது.
1,137 பேருக்கு வியாழக்கிழமை புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மேலும் 20 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,473 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 833 பேருக்கும், காரைக்காலில் 234 பேருக்கும், ஏனாமில் 32 பேருக்கும், மாஹேவில் 38 பேருக்கும் என மொத்தம் 1,137 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில், புதுச்சேரியில் 15 பேரும், காரைக்காலில் 2 பேரும், ஏனாமில் 3 பேரும் என மொத்தம் 20 போ் உயிரிழந்தனா். இவா்களில் 15 போ் ஆண்கள், 5 போ் பெண்கள். இதையடுத்து, உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 1,455 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 ஆகவும் உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 677 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, மருத்துவமனைகளில் 1,730 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆயிரத்து 743 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 473 போ் சிகிச்சையில் உள்ளனா்.
1,486 போ் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 84 ஆயிரத்து 749-ஆக (84.18 சதவீதம்) உள்ளது.