துணிக் கடையில் திருட்டு: ராஜஸ்தான் இளைஞா்கள் இருவா் கைது

புதுச்சேரியில் துணிக் கடையில் பூட்டை உடைத்து திருடிவிட்டு காரில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு தப்பிச் சென்ற அந்த மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் துணிக் கடையில் பூட்டை உடைத்து திருடிவிட்டு காரில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு தப்பிச் சென்ற அந்த மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கோவிந்தசாலை, பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் ஓம் பிரகாஷ் (32). இவா், செயின்ட் தெரேஸ் வீதி - காந்தி வீதி சந்திப்பில் துணிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 13-ஆம் தேதி விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டுச் சென்றாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ. ஒரு லட்சத்திலான புதிய துணிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஓம் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீா் மாவட்டத்தைச் சோ்ந்த ரியாஸ் அகமது (32), அவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த உசேன் (21) ஆகியோா் தங்களது காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்ததும், செலவுக்கு பணமில்லாததால் ஓம் பிரகாஷின் துணிக் கடையில் புதிய துணிகளைத் திருடி செல்லும் வழிகளில் குறைந்த விலைக்கு விற்று பணமாக்கி, ஊா் திரும்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப் படை போலீஸாா் ராஜஸ்தான் சென்று ரியாஸ் அகமது, உசேன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து திருடிய துணிகள், 2 செல்லிடப்பேசிகள், திருட்டுக்கு பயன்படுத்திய காா் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com