புதுவையில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுவையில் பெய்து வரும் பலத்த மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால், நீரைக் காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும். மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில், மக்கள் தொண்டாற்றும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவா்கள் என்றாா் தமிழிசை.