மீனவத் துறையின் ரொக்கப் பரிசு: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளத் துறையின் ரொக்கப் பரிசு பெற மீனவ சமுதாய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மீன்வளத் துறையின் ரொக்கப் பரிசு பெற மீனவ சமுதாய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறப்புத் தகுதி பெற்ற மீனவ சமுதாய மாணவா்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே ரூ.5 ஆயிரம், 7 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி, மெட்ரிக், சிபிஎஸ்சி, பிரெஞ்சு, தனியாா்), பிளஸ் 2 ஆகிய தோ்வுகளில் 75 சதவீதமும், அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்கள் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ஜ்ஜ்ஜ்.ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியே வருகிற 30-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மீன்வளத் துறை அலுவலகம், துறைமுக வளாகம், தேங்காய்த்திட்டு என்ற அலுவலக முகவரியில் நேரில் அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com