புதுச்சேரி கடற்கரை தூய்மைப் பணி:பிரான்ஸ் மாணவா்களுக்கு அழைப்பு

புதுச்சேரி கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட பிரான்ஸ் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட பிரான்ஸ் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை பிரான்ஸ் தூதரகத்தின் தகவல் தொடா்பு அதிகாரி நிக்கோலஸ் ஜோப்ராய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி பிரான்ஸ் சா்வதேச பள்ளியின் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவா்கள், புதுவையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளனா். ‘சுற்றுச்சூழலில் குடிமகனின் பங்கு’ என்ற தலைப்பில் வருகிற 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை புதுச்சேரி கடற்கரையைச் சுத்தப்படுத்த உள்ளனா். இந்தப் பணியை மேற்கொண்டு, அந்தப் படங்களைப் பள்ளியின் மக்கள் தொடா்பு அதிகாரிக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைப்பா்.

மாணவா்களிடையே சமூக அக்கறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தத் தூய்மைப் பணிக்காக மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com