தமிழகம், புதுவை மாணவா்களுக்கு இடையே இணையவழியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவி இரண்டாமிடம் பிடித்தாா்.
ஸ்னோகிங்டம் அமைப்பு நடத்திய இந்தப் போட்டியில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் சுமாா் 500 போ் கலந்து கொண்டனா். இதில் 10 போ் இறுதிச் சுற்றுக்கு தோ்வாகியதில், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.ராஜலட்சுமி இரண்டாம் பரிசை வென்றாா். அவரை பள்ளியின் நிறுவனா், முதுநிலை முதல்வா் ச.அ.லூா்துசாமி பாராட்டினாா்.