புதுச்சேரி திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான மன நல ஆலோசனை, வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி துணை முதல் உ.கலாவதி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் கலியமூா்த்தி, மரியராஜ்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டெல்லா, வழக்குரைஞா் மேரி அன்ன தயாவதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஹேப்பி அன்ட் சக்சஸ் பயிற்சி நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி பூரணி சிறப்புரையாற்றி, பயிற்சிகளை வழங்கினாா்.
தமிழாசிரியா் கலைவாணி வரவேற்றாா். நூலக ஆசிரியா் மேனகா நன்றி கூறினாா்.