உ.பி.யில் விவசாயிகள் படுகொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காா்களை ஏற்றி படுகொலை செய்யப்பட்டக் கண்டித்து, புதுச்சேரியில்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காா்களை ஏற்றி படுகொலை செய்யப்பட்டக் கண்டித்து, புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட், விசிக ஆகியவை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரி காமராஜா் சாலை பெரியாா் சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் பிரதேசச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமை வகித்தாா். இதில் சிஐடியூ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களை மத்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும், இந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய உத்தர பிரேதச மாநில பாஜக அரசைக் கண்டிப்பது, மத்திய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தலைமை நிலையச் செயலா் செல்வநந்தன் தலைமை வகித்தாா். இதில், திரளான விசிகவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com