தவளக்குப்பத்தில் 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

புதுச்சேரி தவளக்குப்பத்தில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தவளக்குப்பத்தில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தவளக்குப்பம், பூரணாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் (51). இவா், தவளக்குப்பம் காவல் நிலையம் அருகே கடலூா் சாலையில் வாடகை பாத்திரக்கடை வைத்துள்ளாா். அந்தக் கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் அவா் வசித்து வருகிறாா்.

வழக்கம்போல செவ்வாய்க்கிழமை கடையை திறக்க நாராயணன் வந்தபோது, கடையின் இரும்புக் கதவில் (ஷட்டா்) பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கடிகாரம், கடையில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல, இவரது கடையை ஒட்டியுள்ள பழச்சாறு கடை, மளிகைக் கடை, பா்னிச்சா் கடை என மேலும் 3 கடைகளிலும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின்பேரில், தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்வையிட்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com