புதுச்சேரி நகரம், சுற்றுவட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளிா்ந்த காற்றுடன் தொடங்கிய சாரல் மழை இரவு வரை தொடா்ந்து பெய்தது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி, புதுச்சேரியில் காலை முதல் மாலை 5 மணி வரை 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குளிா்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.