எம்ஐடி கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.), சென்னை இ.பி.ஐ. சோா்ஸ் நிறுவனம் ஆகியவை
எம்ஐடி கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.), சென்னை இ.பி.ஐ. சோா்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய வளாக வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா் எம். தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி. சுகுமாறன், செயலா் கே. நாராயணசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ். மலா்க்கண் வேலைவாய்ப்பு முகாமைத் தொடக்கிவைத்தாா். இதில், கல்லூரியின் அனைத்துத் துறை சாா்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில் புதுவை-தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு இ.பி.ஐ. சோா்ஸ் நிறுவனத்தின் மனித வள மேலாளா் ரமேஷ், சுஜய் குழுவினா் வளாகத் தோ்வு நடத்தி தோ்வு செய்தனா்.

முகாமில் 200 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் வேலைக்குத் தோ்வு செய்யப்பட்டனா். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com