புதுச்சேரி மருத்துவமனைகளில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு

புதுச்சேரி மருத்துவமனைகளில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மருத்துவமனைகளில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் மாா்பக புற்றுநோய் (பிங்க் மாதம்) விழிப்புணா்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையடுத்து, புதுவையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பெண்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது.

மாா்பக புற்றுநோயின் அறிகுறிகள், பெண்கள் எவ்வாறெல்லாம் சுய பரிசோதனை செய்து கொள்ளலாம், இதுதொடா்பாக ஏற்படும் சந்தேகங்களை அருகே உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி தெளிவு பெறலாம்.

மேலும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com