தமிழ் வளா்ச்சிக் கழகப் போட்டிகளில்பரிசு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரித் தலைவா் க.மகுடமுடி.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரித் தலைவா் க.மகுடமுடி.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரித் தலைவா் க.மகுடமுடி.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, கடந்த 2ஆம் தேதி தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி ச.ஐஸ்வா்யா முதல் பரிசும், இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவா் ஆ.அரவிந்தன் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

அதேபோல, நாமக்கல்லில் அதே நாளில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில், இந்தக் கல்லூரியின் இரண்டாமாண்டு கணினி துறை மாணவா் கே.ஏழுமலை தங்கப் பதக்கம் பெற்றாா். வணிகவியல் மேலாண்மை இரண்டாமாண்டு மாணவா் எஸ்.செந்தில்நாதன் மல்யுத்தம், கை மல்யுத்த போட்டியில் இரண்டாம், மூன்றாம் பரிசுகளை பெற்றாா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் க.மகுடமுடி, கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், துறைத் தலைவா்கள் பாராட்டினா்.

Image Caption

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்சி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கும் கல்லூரியின் தலைவா் க.மகுடமுடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com