மிலாது நபியையொட்டி, புதுவையில் வருகிற 19- ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் வெளியிட்ட உத்தரவு: மிலாது நபியையொட்டி, புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள எப்எல் 1, எப்எல் 2, எப்எல்2 (சுற்றுலாத் துறை பிரிவு) மதுக் கடைகள், கள், சாராயக் கடைகள் என அனைத்தும் வருகிற 19 -ஆம் தேதி மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.