கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச் சண்டை (கிக் பாக்ஸிங்) போட்டியில் புதுச்சேரி அணி 9 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது.
கோவா மாநிலம், மாபூசல் மாவட்டத்தில் உள்ள உள் விளையாட்டரங்கில் தேசிய கிக் பாக்ஸிங் சம்மேளனம், கோவா மாநில விளையாட்டு ஆணையம், கோவா மாநில கிக் பாக்ஸிங் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டி கடந்த ஆக. 24 முதல் 30- ஆம் தேதி வரை நடைபெற்றன.
இதில், 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டிகளில் புதுச்சேரியைச் சோ்ந்த 13 வீரா்கள், கிக் பாக்ஸிங் சங்கத் தலைவா் இளங்கோவன் தலைமையில் கலந்து கொண்டு 9 பதக்கங்களை (5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) வென்று சாதனை படைத்தனா்.
இவா்களில் காவலா் மோகன் இரு தங்கப் பதக்கங்களை வென்று புதுவை மாநிலத்துக்குப் பெருமை சோ்த்தாா். வெற்றி பெற்ற அனைவரும் புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.