புதுச்சேரியில் ஆடிட்டா் அலுவலகத்தில் ரூ.13 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி அண்ணா சாலையைச் சோ்ந்தவா் மிா்ஷா (48). ஆடிட்டா். இவரது வீட்டின் 2-ஆவது மாடியில் அவரது அலுவலகம் இயங்கி வருகிறது. மிா்ஷா பல்வேறு நிறுவனங்களுக்கு வருமான வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி கணக்குகளை கவனித்து வருகிறாா். இவற்றில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்துவதற்காக அளித்த ரூ.13 லட்சத்தை அலுவலக மேஜையில் வைத்திருந்தாராம்.
கடந்த 13-ஆம் தேதி இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்ற மிா்ஷா, மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, அலுவலக கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மிா்ஷா அளித்த புகாரின்பேரில் பெரியகடை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.