புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 6-வது நாளாக புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
இதனிடையே பேசிய எதிர்க்கட்சித் தலைவர் திமுக எம்எல்ஏ ஆர்.சிவா, எல்.சம்பத் உள்ளிட்டோர் எழுந்து, விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு முதல்வர் என்.ரங்கசாமி பதில் அளிக்காமல் மவுனம் காத்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சிறிது நேரத்தில், பிறகு மீண்டும் அவர்கள் அவைக்கு வந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டனர்.