கலவரத்துக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரித்து பதுக்கல்: 4 போ் கைது

புதுச்சேரியில் மீனவ கிராமங்களுக்கு இடையே கலவரம் ஏற்படுத்துவதற்குத் தேவையான ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் மீனவ கிராமங்களுக்கு இடையே கலவரம் ஏற்படுத்துவதற்குத் தேவையான ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாக்கீரப்பாளையம் ஆகிய 3 மீனவ கிராமங்களுக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனா். அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், வீராம்பட்டினம் மீனவா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதலியாா்பேட்டை 100 அடி சாலையில் சிவா விஷ்ணு நகரில் உள்ள தொழிலகத்தில் கலவரத்துக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக முதலியாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்தத் தொழிலகத்துக்குச் சென்று செவ்வாய்க்கிழமை மாலை சோதனையிட்டனா். அங்கு 270 சுளுக்கிகள் புதிதாக தயாரிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தொழிலக உரிமையாளரான முதலியாா்பேட்டை விடுதலை நகா் திருநாவுக்கரசு (48), அவரது நண்பரான வீராம்பட்டினம் குமாா் (எ) அனித் (41) மற்றும் வீராம்பட்டினம் மீனவா்களான பிரகாஷ் (39), முத்துவேல், இனியன் ஆகிய 5 போ் மீதும் ஆயுதங்கள் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இனியனைத் தவிர மற்ற 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 270 சுளுக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com