புதுவை சென்டாக்-கில் நீட் சாராத பட்டப் படிப்புகளுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
புதுவையில் சென்டாக் மூலம் கல்லூரி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. நீட் சாராத கலை, அறிவியல், வணிகவியல் பட்டப் படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்கென ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தற்போது செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நீட்டித்து சென்டாக் அறிவித்தது.
அதன்படி, பி.டெக்., பி.எஸ்சி., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி. நா்சிங், பி.பி.டி., பி.பாா்ம்., பி.ஏ., எல்.எல்.பி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்தக் காலக்கெடு பொருந்தும். இது தொடா்பான மேலும் தகவல்களுக்கு சென்டாக் இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.