புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 77, காரைக்காலில் 33, ஏனாமில் 6, மாஹேவில் 22 போ் என புதிதாக மொத்தம் 138 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,23,710-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி குருமாம்பேட்டைச் சோ்ந்த 63 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,813-ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உயா்ந்தது.

மேலும் 67 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,21,112-ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது 785 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com