புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை காலை தொடங்கியது.
முதல் நாளில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முதல் நாளில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை காலை தொடங்கியது.

தற்போது இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் என். கோகுலகிருஷ்ணனின் (அதிமுக) பதவிக்காலம் அக்டோபர் 6-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது.  இன்று 11 மணிக்கு தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 22ஆம் தேதி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

செப். 23ஆம் தேதி பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை.  வேட்புமனுக்களை திரும்பப் பெற 27ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

புதுச்சேரியில் ஆளும் தே.ஜ கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக இடையே வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. 

அதனால் இதுவரை யாரையும் அக் கூட்டணி சார்பில் அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (41), சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவர் புதுவை சட்டப்பேரவை அலுவகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலர் முனுசாமியிடம் மனுவை அளித்தார். 

41 வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அவர் இதுவரை மக்களவை, சட்டப்பேரவை, மேயர் பதவிகளுக்கான தேர்தலின்போதும், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றார்.

அதேபோல் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com