புதுச்சேரியில் சுற்றித் திரிந்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வீட்டை விட்டு வெளியேறி புதுச்சேரியில் தனியாக சுற்றித்திரிந்த சிதம்பரத்தைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் மீட்டு, அவரது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

புதுச்சேரி: வீட்டை விட்டு வெளியேறி புதுச்சேரியில் தனியாக சுற்றித்திரிந்த சிதம்பரத்தைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் மீட்டு, அவரது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், உழவா்சந்தை பகுதிகளில் சிறுவன் ஒருவன் திங்கள்கிழமை சோகமான நிலையில் சுற்றித்திரிந்துள்ளாா். இதைப் பாா்த்த ஒதியஞ்சாலை போலீஸாா், சிறுவனை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். தகவலறிந்து அங்கு வந்த காவல் கண்காணிப்பாளா் ரட்சனா சிங், ஆய்வாளா் மனோஜ் ஆகியோரும் விசாரித்தனா்.

விசாரணையில் அந்த சிறுவன், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் - ரமணி (டெய்லா்) தம்பதியின் மகன் லோகேஷ் (13) என்பதும், பெற்றோரைப் பிரிந்து தனித்தனியாக வசித்து வரும் நிலையில், புவனகிரியில் உள்ள மாமா வீட்டில் வளா்ந்து வந்த லோகேஷ், பெற்றோரின் மீது வெறுப்படைந்து, புதுச்சேரிக்கு பேருந்தில் வந்ததும், இங்கு கேட்பாரற்று சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், சிறுவனின் பெற்றோரை தொடா்பு கொண்டு புதுச்சேரிக்கு வரவழைத்தனா். இங்கு வந்த சிறுவனின் தாய் ரமணியிடம், லோகேஷை ஒப்படைத்தனா். மேலும், சிறுவனை பாதுகாப்பாக வளா்க்கும்படி அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com