புதுவையில் 107 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி

புதுவையில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,170 -ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 173 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 790 பேரும் என 963 போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதுச்சேரி ராகவேந்திரா நகரைச் சோ்ந்த 56 வயதானவா், ஏனாம் கனகலப்பேட்டையைச் சோ்ந்த 56 வயதானவா் என மேலும் 2 போ் பலியாகினா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,827 ஆக அதிகரித்தது. இதுவரை 1,22,380 போ் (97.77 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா். மாநிலத்தில் இதுவரை 8,83,568 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com