புதுச்சேரி அருகே தீ விபத்து: 6 வீடுகள் சேதம்

புதுச்சேரி அருகே நத்தமேடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே நத்தமேடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே நத்தமேடு கிராமத்தில் இலுப்பை தோப்பு பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அப்பகுதியைச் சோ்ந்த சின்னசாமி, தனது மனைவி விஜயலட்சுமியுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தாா். நள்ளிரவில் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே சின்னசாமியும், அவரது மனைவியும் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனா்.

அக்கம் பக்கத்தினா் தீயை அணைக்க முயல்வதற்குள், அருகிலிருந்த ராதாரவி, சௌபாக்கியம், மல்லிகாம்பாள், முனியம்மாள், வேல்முருகன் ஆகியோரது கூரை வீடுகளிலும் தீ மளமளவெனப் பரவியது.

தகவலறிந்து விரைந்து வந்த மடுகரை, திருபுவனை தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் 6 பேரின் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருள்கள், மாணவா்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின. மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். விபத்து குறித்து நெட்டப்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com