புதுச்சேரி: புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய தளா்வாக வணிக நிறுவனங்கள், மதுக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக புதுவை அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
புதுவையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, செப். 15-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளா்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமுடக்கம் வருகிற 30-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும். சமூக மற்றும் பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்கு தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து விதக் கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை, குளிா்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய மாா்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல இயங்கலாம்.
அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 11 மணி வரை, 50 சதவீதம் போ் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீா் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம்.
சில்லறை மதுக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையும், சாராயம், கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம்.
கடற்கரைச் சாலை மற்றும் பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் போ் மட்டுமே அனுமதித்து இரவு 9 மணி வரை இயங்கலாம்.