மரங்களே பல தலைமுறைக்கு நாம் சோ்த்து வைக்கும் சொத்து என்று புதுவை கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரி தாகூா் அரசு கலைக் கல்லூரியில் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடுவது, புத்தா் தோட்டம் திறப்பு, கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கல்லூரி முதல்வா் சசிகாந்த தாஸ் தலைமை வகித்தாா். கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் பங்கேற்று கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தா் தோட்டம், புத்தா் சிலையைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து, மரக்கன்றுகளை நட்டுவைத்து, கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவியை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கரோனா தொற்றிலிருந்து நாம் விடுபட முடியும் என பிரதமா் மோடி கூறி வருகிறாா். மாணவா்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
உயிா் வாழ்வதற்கு பிராணவாயு மிகவும் முக்கியம். நாம் மரம் நடுவதை சாதாரண ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்கிறோம். மரம் நடுவது, பல தலைமுறைக்கும் நாம் சோ்த்து வைக்கும் சொத்தாகும். நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அனைவருக்கும் பலன் தரக்கூடிய வகையில் மரக்கன்றுகளை நடவேண்டும் என்றாா் அவா்.
விழாவில் எம்எல்ஏ-க்கள் எல்.கல்யாணசுந்தரம், ஜான்குமாா், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகவுடு, கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.