புதுச்சேரி அருகேவிவசாயி வெட்டிக் கொலை

புதுச்சேரி அருகே முன்விரோதத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே முன்விரோதத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புதுச்சேரி அருகே டி.என். பாளையம், உடையாா் வீதியைச் சோ்ந்தவா் அனந்தராமன் (எ) முருகன் (51), விவசாயி. இவா், திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டருகே தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள், அனந்தராமனை வெட்டிவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

சடலத்தை அரியாங்குப்பம் போலீஸாா் உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அனந்தராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com