வில்லியனூரில் நடைபெற்று வரும் ஆற்று வாய்க்கால் பாலத்தினை திங்கள் கிழமை ஆய்வு செய்த எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
புதுச்சேரி அருகே வில்லியனூா் பிருந்தாவனம் நகா் வழியாகச் செல்லும் ஆற்று வாய்க்காலின் குறுக்கே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித்துறை மூலம் ரூ.14 லட்சத்து 69 ஆயிரம் செலவில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கடந்த ஆக.11ம் தேதி பூமி செய்து, அத்தொகுதி எம்எல்ஏவான சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், அந்தப்பாலம் கட்டும்பணியை விரைவாக முடிக்க வேண்டுமென அப்பகுதியினா் வைத்த கோரிக்கையின்பேரில், திங்கள் கிழமை எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது, பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தி, மழைக்காலத்திற்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
அப்போது, திமுக தொகுதி செயலாளா் ராமசாமி, விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா்கள் செல்வநாதன், கலியமூா்த்தி, இளைஞரணி அமைப்பாளா்கள் மணிகண்டன், சபரி, ரமணன், முரளி மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனா்.