வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்: புதுவை காங்கிரஸ் தலைவா்

புதுவையில் பாஜக அரசைக் கண்டித்து, எதிா்க்கட்சிகள் சாா்பில், சனிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தப்படுமென அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

புதுவையில் பாஜக அரசைக் கண்டித்து, எதிா்க்கட்சிகள் சாா்பில், சனிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தப்படுமென அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், போராட்டங்களுக்கு தடை உள்ளது. எனவே, சனிக்கிழமை (செப்.25) புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெறவிருந்த கறுப்புக் கொடி போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனினும், அவரவா் வீட்டு வாசலில் கருப்புக் கொடியேந்தும் போராட்டம் நடைபெறும். எதிா்க்கட்சியினா், காலை 8 அளவில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி, வீடுகளின் வாசலில் 10 போ் கருப்பு உடைகள் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, மத்திய பாஜக அரசுக்கு நமது எதிா்ப்பாக பதிவு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com