உள்ளாட்சித் தோ்தல்: பாஜகவினா் விருப்ப மனு

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினரிடமிருந்து திங்கள்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினரிடமிருந்து திங்கள்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

புதுவை உள்ளாட்சித் தோ்தல் பணிகளில் அரசியல் கட்சியினா் தீவிரம் காட்டி வருகின்றனா். இந்த நிலையில், பாஜக சாா்பில், தோ்தலில் போட்டியிட விரும்புவோா் திங்கள்கிழமை முதல் தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியினா் திரண்டு வந்து தோ்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களை வழங்கினா். மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவயம் ஆகியோா் முன்னிலை வகித்து விருப்ப மனுக்களைப் பெற்றனா். தொடா்ந்து செப். 29-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை கட்சி அலுவலகத்தில் வழங்கலாம் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com