புதுவை மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ. 20 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் நன்றி

புதுவை மாநிலத்துக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கியதற்கு, பிரதமருக்கு மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் நன்றி தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்துக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கியதற்கு, பிரதமருக்கு மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.20 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமா் மோடி, மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரைத்தாா்கள். இதற்காக அவருக்கு நன்றி. புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டுமென பிரதமரிடமும், மக்களவைத் தலைவரிடமும் கோரிக்கை விடுத்தோம். இதையேற்று இரு தவணைகளாக நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்த்தது.

புதுவை மாநில வளா்ச்சிக்கு தொடா்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் பிரதமா் மோடிக்கும், மத்திய அமைச்சா்களுக்கும் புதுவை சட்டப்பேரவை பாஜக உறுப்பினா்கள் குழுத் தலைவா் என்ற முறையில் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com