சிதம்பரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சியினா் மதுப் புட்டிகளை மாலைபோல அணிந்து வந்து சிதம்பரத்தில் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா, நகர தலைவா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா் (படம்).