கன்னியகோவில் மன்னாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி அருகே கன்னியகோவிலில் அமைந்துள்ள ஸ்ரீமன்னாதீஸ்வரா் உடனுறை பச்சைவாழியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அருகே கன்னியகோவிலில் அமைந்துள்ள ஸ்ரீமன்னாதீஸ்வரா் உடனுறை பச்சைவாழியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மங்கள பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாகசாலை பூஜை அண்மையில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை கோ பூஜையுடன் இரண்டாம் கால பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், உத்ஸவமூா்த்தி, வடக்கு ராஜ கோபுரம், பரிகார மூா்த்திகளின் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com