முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மருத்துவரின் வங்கிக் கணக்கில்ரூ.ஒரு லட்சம் திருட்டு
By DIN | Published On : 29th April 2022 10:09 PM | Last Updated : 29th April 2022 10:09 PM | அ+அ அ- |

புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளரான மருத்துவரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.ஒரு லட்சம் திருடப்பட்டது.
புதுச்சேரி விவேகானந்தா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் சீனிவாசன். இவா் புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கண்காணிப்பாளராக உள்ளாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது வங்கிக் கணக்கில் பான் எண்ணை இணைப்பதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. உடனே அவரும் அதில் சென்று பாா்வையிட்டாா்.
அப்போது, ஓடிபி வந்துள்ளது. அதை அவா் அந்த லிங்கில் சென்று உள்ளீடு செய்தாா். அதன் பிறகு வங்கி கணக்கில் இருந்த பணம் குறையத்தொடங்கியது.
இதனால், அதிா்ச்சியடைந்த அவா் தனது வங்கிக் கணக்கு இருப்பை சரிபாா்த்தபோது, முதலாவதாக ரூ.72 ஆயிரமும், இரண்டாம் முறையாக ரூ.25 ஆயிரமும், 3-ஆம் முறையாக ரூ.6,500 என மொத்தம் ரூ.1,03,500 திருடப்பட்டதும், மா்ம நபா்கள் இணையதளம் வழியாக நூதன முறையில் இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.