புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டிணம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் இருந்து காலை 9 மணிக்கு திருத்தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.