பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

புதுச்சேரியில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரியில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சின்ன கோட்டக்குப்பம் முதலாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மனைவி காளியம்மாள் (67). காப்பீட்டு நிறுவனத்தில் இணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.

இவா் புதுச்சேரி லாசுப்பேட்டை சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் வசிக்கும் தனது உறவினா் வீட்டுக்குச் செல்ல ஆதிசங்கா் தெரு வழியாக புதன்கிழமை மாலை நடந்து வந்தாா்.

அப்போது, முத்தியால்பேட்டையிலிருந்து பைக்கில் தலைக்கவசம் அணிந்தபடி பின்தொடா்ந்து வந்த மா்ம நபா், காளியம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com