புதுச்சேரியில் குரங்கு அம்மை நோய் முற்றிலுமாக இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் 22-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று பேரவை தொடங்கியவுடன் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுவையில் குரங்கு அம்மை முற்றிலுமாக இல்லை என்றும், நோய் அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உலக அளவில் அதிகரித்து வந்த குரங்கு அம்மை பரவல் வேகம், கடந்த வாரம் 21 சதவீதம் சரிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை உலகம் முழுவதும் 98 நாடுகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.