இளைஞா் கொலை வழக்கில் 17 வயது சிறுவனும், அவரது அண்ணனும் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கல்மண்டபத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (32). தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 16-ஆம் தேதி இரவில் கொல்லப்பட்டாா். இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதுதொடா்பாக, மணிகண்டன் (19). அவரது தம்பியான 17 வயது சிறுவன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து காமராஜ் கொலைக்குப் பயன்படுத்தி கத்தி உள்ளிட்டவற்றை போலீஸாா் கைப்பற்றினா். அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.