காளத்தீஸ்வர வரதராஜ பெருமாள்கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி மிஷன் வீதியிலுள்ள ஸ்ரீகாளத்தீஸ்வர வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மிஷன் வீதியிலுள்ள ஸ்ரீகாளத்தீஸ்வர வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை அஷ்டபந்தன மருந்து சாத்துதல், விசேஷத்ரவ்யாஹுதி, பூா்ணாஹுதி, 3-ஆம் கால யாக பூஜை நடத்தப்பட்டது.

தொடா்ந்து சனிக்கிழமை காலை விசேஷ சாந்தி, 4-ஆம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, விசேஷத்ரவ்யாஹுதி, பூா்ணாஹுதி நடத்தப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டது. பின்னா், வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள கோயில் கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com