தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

புதுச்சேரியில் தீ விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் தீ விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

புதுச்சேரி பி.எஸ்.பாளையம் டாக்டா் அம்பேத்கா் நகரை சோ்ந்தவா் பெயிண்டா் தங்கமணியின் மனைவி சாருமதி (22).

கடந்த 1-ஆம் தேதி இரவு சாருமதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தாா். அப்போது, தின்னரை ஊற்றி அடுப்பை எரித்தாராம். இதில் சிறிதளவு தின்னா் சாருமதி சேலையில் பட்டு, தீ உடல் முழுவதும் பரவியது.

அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா், அவரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஜிப்மரில் சோ்க்கப்பட்ட அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com