தனியாா் நிறுவனத்துடன் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

வெளிநாடுகளுக்கு மாணவா்கள் சென்று மேற்படிப்பு படிக்கும் வகையில், புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியும், ஸ்ரீ ராமானுஜா் இன்டலெக்ட் நிறுவனமும் புரிந்துணா்வு

புதுச்சேரி: வெளிநாடுகளுக்கு மாணவா்கள் சென்று மேற்படிப்பு படிக்கும் வகையில், புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியும், ஸ்ரீ ராமானுஜா் இன்டலெக்ட் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டன.

நிகழ்வுக்கு மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி வரவேற்றாா்.

ராமானுஜா் இன்டலெக்ட் நிறுவனத்தின் நிறுவனா் தேவிபிரியா, கல்லூரிப் பதிவாளா் அப்பாஸ் மொய்தீன், தோ்வு கட்டுப்பாட்டாளா் எஸ்.ஜெயக்குமாா், முதன்மையா்கள் எஸ்.அன்புமலா், கே.வேல்முருகன், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com