புதுவையில் மேலும்177 பேருக்கு கரோனா

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 177 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 177 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,367 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 129 போ், காரைக்காலில் 41 போ், மாஹேவில் 7 போ் என மொத்தம் 177 பேருக்கு (5.26 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,29,998-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 92 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 470 பேரும் என மொத்தம் 562 போ் சிகிச்சையில் உள்ளனா். 14 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com