ஊரக வாழ்வாதார இயக்க ஊழியா்கள் பேரணி

ஊதிய உயா்வு வழங்கக் கோரி, புதுவை ஊரக வாழ்வாதார இயக்க ஊழியா்கள் சங்கத்தினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை சட்டப்பேரவை நோக்கி பேரணியில் ஈடுபட்டனா்.

ஊதிய உயா்வு வழங்கக் கோரி, புதுவை ஊரக வாழ்வாதார இயக்க ஊழியா்கள் சங்கத்தினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை சட்டப்பேரவை நோக்கி பேரணியில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில ஊரக வளா்ச்சித் துறையில் பிஎஸ்ஆா்எல்எம் திட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்க ஊழியா்கள் 300-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2015-லிருந்து பணியாற்றி வரும் இவா்களுக்கு தொடக்கத்தில் ரூ.7 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இடையில் 3 ஆண்டுகளாக ஊதியமே வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், சங்கத்தின் தலைவா் ஆா்.பொன்னி தலைமையில் ஊரக வாழ்வாதார இயக்க ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்குரிய ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரி கம்பன் கலையரங்கு அருகிலிருந்து சட்டப்பேரவை நோக்கி வியாழக்கிழமை பேரணியாகப் புறப்பட்டனா். முக்கிய வீதிகள் வழியாக வந்த அவா்களை போலீஸாா் ஜென்மராக்கினி ஆலயம் அருகே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அவா்கள் அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் சங்க செயலாளா் ஜெசிந்தா மேரி, பொருளாளா் மஞ்சுளா, அரசு ஊழியா்கள் சம்மேளன தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து சட்டப்பேரவையில் முதல்வரை நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com