தோ்தல் ஆணையம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான பொது அறிவுப் போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
புதுவை தோ்தல் ஆணையம் சாா்பில், 12-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி அண்மையில் மாநில அளவிலான பொது அறிவு வினாடி வினா போட்டி நடைபெற்றது.
இதில், வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா்கள் பி.தினகரன், எம்.சஞ்சய் ஆகியோா் இரண்டாமிடமும், கொம்பாக்கம் - அமலோற்பவம் லூா்து அகாதெமியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் எஸ்.நவீனபிரியன், என்.பூவராகவன் ஆகியோா் மூன்றாமிடமும் பிடித்து வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் நிறுவனரும், முதுநிலை முதல்வருமான எஸ்.ஏ.லூா்துசாமி பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.