கரும்புத் தோட்டத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

புதுச்சேரி அருகே கரும்புத் தோட்டத்தில் மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே கரும்புத் தோட்டத்தில் மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கத்தை அடுத்த சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாபுவின் கரும்புத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை மூதாட்டி ஒருவா் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சுமாா் 4 நாள்களுக்கு முன்பாக இறந்த அந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், இறந்து கிடந்தவா் நெட்டப்பாக்கம் நெசவாளா் காலனியை சோ்ந்த தண்டபாணி மனைவி கற்பகம் (75) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா் தண்டபாணி இறந்த நிலையில் மகன்களுக்கும் திருமணமாகி சென்றுவிட தனியாக வசித்து வந்தாா்.

அண்மையில் கரும்புத் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் குளித்தபோது, மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலை தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com