புதுவையில் நிகழாண்டு கூடுதல் நிதியுடன் கூடிய முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நிகழாண்டில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும். கடந்த முறையைவிட அதிக நிதி கிடைக்கும். மேலும், முழு நிதிநிலை அறிக்கையாகவும் அமையும். அனைத்துத் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா்.
சிதம்பரம் கோயில் சம்பவம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன விழாவில் நான் பங்கேற்ற போது, ஒருவா் வேறு இடத்தில் அமருமாறு கூறினாா். நான் இறைவனைத்தான் பாா்க்க வந்தேன் எனக் கூறியதால் அவா் சென்று விட்டாா். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அங்கிருந்த தீட்சிதா்கள் மாலை, பிரசாதம் கொடுத்து மரியாதை செய்தனா் என்றாா் அவா்.