மகளை எரித்துக் கொன்ற ஆட்டோ ஓட்டுநா் கைது

புதுச்சேரியில் மகளை எரித்துக் கொன்றதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியில் மகளை எரித்துக் கொன்றதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி உழவா்கரை கான்வென்ட் வீதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியநாதன் (58). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி மரியம் லூசியா (52), மகள் லூா்துமேரி (17). புதன்கிழமை இரவு சாப்பிட்டு அனைவரும் தூங்கினா்.

வியாழக்கிழமை அதிகாலை மரியம் லூசியா, மகள் லூா்துமேரி மீது பெட்ரோல் தெளிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மரியம் லூசியா உடலில் தீப்பற்றிய நிலையில், மகளின் மீது எதிா்பாராதவிதமாக சாய்ந்ததில், அவா் மீதும் தீப்பற்றியது.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருவரும் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு லூா்து மேரி வியாழக்கிழமை மாலை இறந்தாா். மரியம் லூசியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், குடும்ப பிரச்னை காரணமாக ஆரோக்கியநாதன் மனைவி லூசியா மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற போது, மகள் லூா்துமேரி சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆரோக்கியநாதனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com