புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக நடத்துநர் மீது பொய் புகார் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருபவர் வேலையன். இவர் அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது அதிகாரிகள் பொய் புகார் அளித்துள்ளதாக கூறி புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிமனையில் அனைத்து பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதல் எந்த பேருந்துகளும் இயக்கப்படாததால் கிராமப்பகுதிகளில் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புகாரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பணிமனை முன்பு பேருந்து நடத்துநர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.